வடிவேலுவுடன் போட்டிபோடும் பவர்ஸ்டார் சீனிவாசன்!!

282

Powerவழக்குகளில் சிக்கி கைது, நீதிமன்றம் என அலைந்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெற்றிகரமாக ஓடியது. மேலும் சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் கூறியதாவது..

என் மீது நிறைய வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அதில் பாதி பொய்யானவை. சினிமாவில் நான் வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை. பொறாமையால் என்னை சிக்க வைத்து விட்டார்கள். நிறைய பேரை நம்பி ஏமாந்து போனேன். எல்லோரிடமும் அன்பாக பாசமாக பழகுவேன். அதை வைத்து என்னை வீழ்த்தி விட்டார்கள். இனி கவனமாக இருப்பேன்.

எனக்கு பின்னால் சதி திட்டம் நடந்துள்ளது அதை விரைவில் வெளியே கொண்டு வருவேன். காமெடியில் வடிவேலுக்கும் எனக்கும் போட்டி என்பதெல்லாம் சரியல்ல. அவர் எனக்கு முன்பே சினிமாவில் இருக்கிறார். இருவரும் காமெடி வேடங்களில் நடிக்கிறோம்.

ரசிகர்கள் யார் நடிப்பு பிடிக்கிறதோ அதை பார்ப்பார்கள். கண்ணா லட்டு திட்ட ஆசையா படம் பார்த்து ரஜினி என்னை பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. அவரை நேரில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்.

 

எனது ஆனந்த தொல்லை பட வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இவ்வாறு பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார்.