வவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சிப் பாசறை!!

683

பயிற்சிப் பாசறை

வவுனியா மாவட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சி பாசறை ஒன்று வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (15.06.2019) காலை 9.30 தொடக்கம் மதியம் 3.30 மணிவரை நடைபெற்றது.

ட்ராண்ஸ்பேரென்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கான செயலமர்விற்கு வவுனியா நகரசபை, வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபைகளை சேர்ந்த 15க்கு மேற்பட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இச் செயலமர்வின் விரிவுரையாளராக நளினி ரத்னராஜா கடமையாற்றியதுடன் ட்ராண்ஸ்பேரென்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனத்தின் முகாமையாளர் மங்களா சங்கர் (சட்டத்தரணி) , நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எச்.எம்மக்கீன் , சட்ட உத்தியோகத்தர் அஞ்சனா விக்ரம ஆராய்ச்சி ஆகியோர் வழிநடத்தியிருந்தனர்.