தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி
மட்டக்களப்பு ஏறாவூரிலிருந்து பெரியபுல்லுமலை வெலிக்காகண்டி குளக்கட்டு நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. ஏறாவூரைச் சேர்ந்த மொஹமட் இர்பான் என்பவரின் முச்சக்கர வண்டியே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த முச்சக்கர வண்டியில்மொஹமட் இர்பானின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். மனைவியையும் பிள்ளைகளையும் இறக்கிவிட்டு முச்சக்கர வண்டியை அடுத்த பக்கமாக திருப்பும்போது தீப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
தீப்பற்றியதையடுத்து முச்சக்கர வண்டி சாரதி உடனடியாக வெளியே பாய்ந்துள்ளார். மேலும் அதிக அளவான வெப்பம் காரணமாக குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.