வவுனியா மூனாமடு குளத்தில் இறந்த மீன்களை அகற்ற நடவடிக்கை!!

805

இறந்த மீன்களை அகற்ற நடவடிக்கை

வவுனியாவில ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் சிறுபோகத்திற்கு அதிக நீரை இறைத்து பயன்படுத்தியமை காரணமாக மூனாமடுக் குளத்தின் நீர் வற்றியமையால் இறந்த மீன்களினை அகற்றுவதற்தற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சுகாதார பணிமனையில் மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் எஸ்.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா, புதுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மூனாமடு குளத்தின் கீழ் விதைக்கப்பட்டுள்ள 45 ஏக்கர் சிறுபோக விவசாய நிலங்களுக்கு அதிகளவிலான நீரை பயன்படுத்தியமையால் குளத்தது நீர் வற்றியுள்ளது.

இதன்காரணமாக நீர் இன்றி அக்குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகின்றது. இது குறித்து வவுனியா சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட சுகாதார பரிசோதர்கள் குறித்த நீர்பானசன குளத்தின் பங்காளர்களின் துணையுடன் இறந்த மீன்களை அகற்றி புதைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த குளத்தின் நீர்மட்டத்தை கவனத்தில் கொள்ளாது சிறுபோக நெற்செய்கைக்கு நீர் இறைக்கப்பட்டமையே மீன் இறப்புக்கு காரணம் எனவும், சம்மந்தப்பட்டவர்களின் பொறுப்பற்ற செயற்பாடே இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.