வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!!

991

இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா செட்டிக்குளம் காந்திநகர் பகுதியில் இன்று (18.06.2019) காலை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலத்தினை மீட்டடெடுத்துள்ளதாகவும் 26 வயதுடைய பரணி என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தூக்கில் தொங்கியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இம் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.