வவுனியாவில் மோப்ப நாயுடன் களத்திலிறங்கிய பொலிசார் : காரணம் என்ன?

321

மோப்ப நாயுடன் பொலிசார்

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இதனை முன்னிட்டு இவரின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

வவுனியா – செக்கட்டிப்புலவு பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டட திறப்பு விழாவில் ஆளுநர் சுரேன் ராகவன் இன்றைய தினம் கலந்துகொண்டார்.

இந்த நிலையிலேயே பாடசாலை வளாகத்தை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், அங்கு பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்களும் மேற்கொள்ளப்பட்டன.