வவுனியா முன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் கட்டிடம் திறந்துவைப்பு!!

720

கட்டிடம் திறந்துவைப்பு

வவுனியா முன்றுமுறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பிரிவு வித்தியாலத்தில் இந்திய மக்களின் நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட கட்டிடம் இன்று (19.06.2019) காலை 9 மணியளவில் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

32 இலட்சத்து 37ஆயிரத்து 725 ரூபா நிதியில் அமைக்கப்பட்ட இக் கட்டிடத்தினை வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் மற்றும் இலங்கைக்கான யாழ்.இந்திய துணைத்தூதுவர் பாலசந்திரனுடன் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர் இணைந்து திறந்து வைத்தனர்.

இந் நிகழ்வில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன், இலங்கைக்கான யாழ்.இந்திய துணைத்தூதுவர் பாலசந்திரன் மற்றும் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன், வடமாகாண கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், தெற்கு வலயக்கல்வி பணிமணை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தியா மக்களின் நிதி பங்களிப்புடன் வவுனியா செக்கட்டிப்புளம் ஜீ.ரி.எம்.எஸ் பாடசாலை, தாலிக்குளம் ஜீ.ரி.எம்.எஸ் பாடசாலை, ஒலுமடு ஜீ.ரி.எம்.எஸ் பாடசாலை, சின்னடம்பன் பாரதி வித்தியாலயம் போன்றவற்றில் அமைக்கப்பட்டுள்ள கட்டடிடங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.