முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி மர்மமான முறையில் மரணம்!!

535

Former-Testமுன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேயை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் அவரது தாயார் வீட்டில் பிணமாகக் கிடந்தார்.

இது தற்கொலை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர், தற்கொலைக் கடிதம் ஒன்றையும் அவர்கள் மீட்டுள்ளனராம்.

அதில் தான் தனது வாழ்க்கையில் மிகவும் சோர்வடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இவருக்கும், சலீல் அங்கோலாவுக்கும் 2 மகன்கள் உள்ளனர்.