காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று நவகிரக சாந்திஹோமம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் தனது மனைவியுடன் காரில் திருநள்ளாறு வந்தார்.
கோவிலில் சனீஸ்வரன் சன்னதியில் நடந்த நவகிரக சாந்தி ஹோமத்தில் 2 பேரும் கலந்து கொண்டனர். ஹோமம் முடிந்ததும் சனீஸ்வர பகவானுக்கு தீபவழிபாடு நடந்தது. நடிகர் விஜய் பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டார்.
பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து விட்டு விஜய் தனது மனைவியுடன் காரில் புறப்பட்டு சென்றார்.