ஆழிபேரலையால் உயிர் நீத்த எம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் முகமாக 26.12.2013 அன்று வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையால் பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைக்கப்பட்ட ஆழிப்பேரலை நினைவு தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.
காலை 9.27 மணிக்கு நடைபெறவுள்ள இன் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் மற்றும் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக் கொள்கின்றனர்.