வவுனியாவில் இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் கைது!!

328

இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் கைது

வவுனியா பழைய பேருந்து நிலைப்பகுதியில் இன்று மதியம் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற நபர் ஒருரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் முன்னர் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் விடுமுறையில் வீடு சென்று திரும்பி இராணுவத்தில் இணைந்து கொள்ளவில்லை. இதையடுத்து குறித்த நபர் இன்று வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் வைத்து இராணுவப் புலனாய்வுப்பிரிவினால் கைது செய்யப்பட்டு அவரிடம் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் என்ன நடந்துள்ளது என்பதை அறிந்துகொள்வதற்காக பலர் ஒன்றுகூடிய நிலையில் அங்கு சென்ற பொலிசார் நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.