வவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு செயலமர்வு!!

333

செயலமர்வு

நிலை மாறுகால நீதிப் பொறிமுறை குறித்து உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று(22.06) காலை 9மணிமுதல் பிற்பகல் 12மணிவரையும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அனுசரணையிலும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டிலும் வவுனியா நகரசபை, தமிழ் தெற்கு பிரதேச சபை, வடக்கு உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கான செயலமர்வில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நீதித்துறையின் செயற்பாடுகள்,

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அலுவலகம் குறித்தும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிஙகள மொழி பெயர்ப்புடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக கலந்து கொண்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.