உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த சிறுவர்களின் தற்போதைய நிலை!!

467

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் 7 சிறுவர்களுக்கு நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இதனை அறிவித்துள்ளது.

எனவே உதவி செய்ய விரும்புவோர் 0112778911 அல்லது 2778912 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்கள் 7 பேருக்கும் மண்டையோடுகளில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் 23 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். 72 சிறுவர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு மனநல ஆலோசனைகள் தேவைப்படுவதாக சிறுவர் அதிகாரசபையின் தலைவர் எச்.எம்.அபேரட்ன தெரிவித்துள்ளார்.