மோட்டார்சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களுக்கு நேர்ந்துள்ள பரிதாபம்!!

250

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியின், புடவைக்கட்டு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் குச்சவெளி – செந்தூர், மதுரங்குடா பகுதியை சேர்ந்த கே.சுகந்தன் (18 வயது) மற்றும் அதே இடத்தை சேர்ந்த ஆர்.நிரோசன் (28 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் இருந்து இருவரும் மோட்டார்சைக்கிளில் இன்று மாலை புடவைகட்டு பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

இந்த நிலையில் குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.