காமசூத்ரா 3D படம் தரக்குறைவான செக்ஸ் படமல்ல : ரூபேஷ் பால்!!

1116

Kamasutra-3Dகாமசூத்ரா 3D படம் தரக்குறைவான செக்ஸ் படமல்ல. ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் உள்ள படம் என்று அதன் இயக்குநர் ரூபேஷ் பால் விளக்கம் அளித்தார்.

காமசூத்ரா 3D என்ற தலைப்பில் இயக்குநர் ரூபேஷ் பால், இந்தியிலும் ஆங்கிலத்திலும் ஒரு படம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சர்ச்சைக்குரிய நடிகை ஷெர்லின் சோப்ரா, மிலிந்த் குணாஜி, கிங் மால்கான், சலிம்குமார், நாசர், மகராந்த் தேஷ்பாண்டே, மலீனா கான், சுஷ்மித்ரா முகர்ஜி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தலைப்பு இது ஒரு செக்ஸ் படமாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை படத்தின் இயக்குநர் ரூபேஷ் பால் மறுத்துள்ளார். அவர் கூறுகையில்..

இந்த படம் ஆஸ்கார் விருது பரிந்துரை போட்டியில் உள்ளது. அசல் இசைக் கோர்ப்பு, அசல் பாடல்கள் பிரிவில் இந்தப் படம் போட்டியிடுகிறது. இதுகுறித்த அறிவிப்பு ஜனவரி 16ஆம் திகதி வெளியாகிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில் இந்தபடம், தவறாக மதிப்பிடப்பட்டுள்ளது. அரை நிர்வாண படங்களால் சர்ச்சைக்கு ஆளான நடிகை ஷெர்லின் சோப்ரா முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்ததும் இந்தபடம் தரம் குறைந்த ஆபாசப்படமாக இருக்கலாம் எனவும் தவறாகக் கருதப்படுகிறது.

ஆனால் இதைப் பொருட்படுத்தாமல் சர்வதேச தரத்தில் நல்ல தொழில்நுட்பத்துடன் இந்த படத்தை எடுத்திருக்கிறோம். சர்வதேச நாடுகளில் நல்ல விலைக்கு முன்கூட்டியே விற்பனை ஆகி இருக்கிறது.

சென்னை எக்ஸ்பிரஸ், கிரிஷ் 3 போன்ற படங்களை விட இரண்டு மடங்கு விலைக்கு இந்த படம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த படம் வாத்சாயனரின் காமசூத்ரா அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் பரிந்துரைப் போட்டியில் இருப்பதால் சிறந்த இதிகாசப்படைப்பாக அமைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி உள்ளது என்றார்.

இந்த படம் பழங்கால இந்தியாவை பின்னணியாகக் கொண்டது. தனது கணவரைத் தேடி ஒரு அழகான இளவரசி கடற்பயணம் மேற்கொள்கிறாள். ஆனால் சகப் பயணி ஒருவருடன் அவள் மேற்கொள்ளும் இந்த பயணம், அவளது உடல், மனம், ஆன்மா என அத்தனையையும் புரட்டிப்போட்டு விடுகிறது. அது எப்படி என்பதை மையக் கருத்தாகக் கொண்டுதான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.