வவுனியாவில் சந்தைக்கு சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்!!

567

நேர்ந்த பரிதாபம்

வவுனியா – பொஹஸ்வெவ பகுதியிலிருந்து சந்தைக்கு சென்ற விவசாயியொருவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் 58 வயதுடைய டொன்டடி ஆரியவம்ச என்ற நபரே உயிரிழந்துள்ளார். அவர் வவுனியா நகரிலுள்ள சந்தைக்கு மோட்டார்சைக்கிளில் மரக்கறிகளை ஏற்றி சென்ற போது, மாமடுவ வீதியிலுள்ள பிள்ளையார் ஆலய பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது.

இந்த நிலையில் அவரது சடலம் பொஹஸ்வாவே பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.