திருமணமான 17 நாளில் புதுப்பெண்ணை பார்த்து அலறி துடித்த பெற்றோர்!!

270

அலறி துடித்த பெற்றோர்

தமிழகத்தில் திருமணமான 17 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தின் வாணியம்பாடியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தீபிகா (25). பொறியாளரான இவருக்கும் நவீன்குமாருக்கும் கடந்த 6-ம் திகதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் கணவர் வீட்டில் சில நாட்கள் வசித்த தீபிகா கடந்த 2 தினங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு திரும்பினார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் திடீரென தூக்குப்போட்டுக்கொண்டார்.

அப்போது வெளியில் சென்ற குடும்பத்தினர் வீடு திரும்பியபோது தீபிகா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினர். அக்கம்பக்கத்தினரும் அங்கு வரவே அவர்கள் உதவியுடன் தூக்கிலிருந்து மீட்டு அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீபிகா ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர் இதையடுத்து பொலிசார் தீபிகா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 17 நாட்களிலேயே தீபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.