திருமணம் முடிந்த சில நிமிடங்களில் விதவையான இளம் பெண் : புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை!!

295

புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், அன்றே அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி தர்சினி பிரியா, கனகன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் செய்த அன்றே புதுமண தம்பதியர் அரிவாளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இதில் மணமகன் கனகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை மணந்து கொண்ட தர்சினி பிரியாவும் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மணமகனின் சகோதரரே இந்த சாதி ஆணவக் கொலையில் ஈடுபட்டது பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள இந்த சாதி ஆணவப்படுகொலை திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டது எனவும், முன்பே கனகனும் – தர்சினி பிரியாவும் திருமணம் செய்துகொண்டால் வெட்டி ஆற்றில் வீசுவோம் என கனகனின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாக தர்சினி பிரியாவின் பெற்றோரும் அவரது உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.