காதலன் இழப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட காதலி!!

307

காதலன் இழப்பை தாங்க முடியாமல்..

ஸ்காட்லாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து இறந்ததால், அவர்களுடைய இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஸ்காட்லாந்தை சேர்ந்த கார்லி மெக்கல்லம் (18) என்கிற இளம்பெண் கடந்த ஒரு வருடமாக ரிச்சி கிங் (21) என்கிற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

ஏப்ரல் 10ம் திகதியன்று ரிச்சி தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அதற்கு சில நாட்களுக்கு முன் மார்ச் 17ம் திகதியன்று, கார்லியின் நடன பயிற்சியாளர் கோடி பிரவுன் தற்கொலை செய்துகொண்டார். இவர்களை தொடர்ந்து கார்லியின் நெருங்கிய நண்பரான ஜார்ஜ் டைக்ஸ், மே 20ம் திகதியன்று தற்கொலை செய்துகொண்டார்.

அடுத்தடுத்து நண்பர்கள் இறந்ததால் கார்லி பெரும் சோகத்தில் இருந்து வந்துள்ளார். அவர்களுடைய இழப்பு குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இவை எல்லாம் எதற்கு நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஏதாவது ஒரு காரணத்திற்காக தான் நடந்திருக்க வேண்டும். நான் என் காதலனை அதிகம் மிஸ் பண்ணுகிறேன் என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கார்லியும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். அடுத்தடுத்து நான்கு நண்பர்களும் எந்தவித காரணமும் இல்லாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.