மீண்டும் தொடரும் புகையிரத ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!!

281

மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு

புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். கடந்த வாரம் முன்னெடுத்திருந்த 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

வேதன பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட உள்ள இப்போராட்டம் இன்று நள்ளிரவு முதல் அடுத்த 24 மணிநேரம் வரை தொடர்ந்தும் இடம்பெறும் என தெரியவந்துள்ளது.

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் நோக்குடன் ஓய்வு பெற்ற புகையிரத சேவை ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொள்ள உத்தேசித்திருப்பதற்கு புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.