வவுனியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது : காரணம் இதுதான்

569

மூன்று இளைஞர்கள் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வருகை தந்த வவுனியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமான முறையில் வருகைதந்துள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் (27.06.2019) கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்ப்பிரிவு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் வருகை தந்த காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த 24, 27, 34 வயதுடைய இளைஞர்கள் மூவரே மீன்பிடி படகு ஒன்றின் மூலம் இவ்வாறு வருகை தந்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.