யாழில் மாணவிகளிடம் பணம் பெற்ற அதிபர் பிடிபட்டார்..!

569

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பிரபல பெண்கள் உயா்தர பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி சங்க நிதி என்ற பெயாில் இடம் பெற்ற பாாிய நிதி மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.

இப் பாடசாலையில் உயா்தர வகுப்பு மாணவா்களிடம் பாடசாலை அபிவிருத்தி சங்க நிதி என்ற போர்வையில் தலா 1600 ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளது. எனினும் குறித்த நிதி எதற்காக பெறப்படுகின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்ட வகையில் கூறப்படாததுடன், பெற்றுக் கொண்ட பணத்திற்கு பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் விசேட அதிகாாிகள் குழு நேற்று முன் தினம் பாடசாலைக்குள் நுழைந்து நடாத்திய அதிரடி சோதனையில், பாடசாலை அதிபாின் ஒழுங்கில் நடைபெற்ற இந்த முறைகேட்டு சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ள நிலையில் உடனடியாக பாடசாலை அதிபா் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை அதிகஷ்ர பிரதேசங்களாக இனங்காணப்பட்ட வலயங்களிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விழாக்கள், கொண்டாட்டங்களுக்காக பணம் வசூலிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.