கொடூரத்தின் உச்சம் : கழிவறை பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 வயது குழந்தையின் உடல்!!

282

கொடூரத்தின் உச்சம்

சென்னையில் 4 வயது குழந்தையை பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கழிவறை பக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சென்னையை சேர்ந்த 4 வயது குழந்தை நேற்று மதியம் முதல் திடீரென மாயமாகியுள்ளார்.

பல இடங்களில் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்காததால், கண்ணீருடனே அவருடைய பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கழிவறையில் இருந்த பக்கெட்டில், சாக்குப்பைக்குள் மகளின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் கதறி அழ ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் விரைந்த வந்த பொலிஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொள்கையில், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது, சிறுமியின் காதணி கம்மல் அவருடைய பெரியப்பா உறவுமுறை கொண்ட மீனாட்சிசுந்தரத்தின் படுக்கையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொள்கையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும்போது கதறி கூச்சலிட்டதால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் குழந்தையின் உடலை சாக்குப்பையில் மறைத்துவிட்டு, ஒன்றும் தெரியாதவர் போல மற்றவர்களுடன் சேர்ந்து தேட ஆரம்பித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் மீனாட்சிசுந்தரம் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவமானது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.