வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!!

538

வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளமருதங்குளம் காட்டுப் பகுதியில் மரமொன்றின் அடிவாரத்தில் பிளாஸ்ரிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது.

ஓமந்தை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று காலை 10 மணிக்கு ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ்தசில்வா தலைமையிலான குழுவினர் குறித்த காட்டுப் பகுதிக்குச் சென்று மரமொன்றின் அடிவாரத்தின் கீழ் பிளாஸ்டிக் பையொன்றில் சுற்றப்பட்ட நிலையில் சுமார் 25ற்கு மேற்பட்ட நிலக்கன்னிவெடிகள் மற்றும் ஆ.ர்.பீ.ஜீ ரக வெடிகுண்டு ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.