வவுனியாவில் கடும் வறட்சி : துர்நாற்றம் வீசும் குளங்கள்!!

763

கடும் வறட்சி

வவுனியாவில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக குளங்களில் உள்ள நீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் வவுனியா, மகாகச்சக்கொடிய குளத்தில் இருந்த பெருமளவு மீன்கள் உயிரிழந்துள்ளன.

இதனால் அப்பகுதியில் விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள் விவசாய செய்கைகளை கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், கால்நடைகளும் மேய்ச்சல் தரைகளில் குடி தண்ணீர் இன்மையினால் அவதிக்குள்ளாகியுள்ளது.

இதனால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதுடன், அப்பகுதியெங்கும் துர்நாற்றம் வீசிவருவதாக தெரிவிக்கின்றனர். வவுனியாவில் பெருமபாலான குளங்கள் வற்றியுள்ள நிலையில் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகின்றது.