இளையராஜாவின் உடல் நிலையில் முன்னேற்றம்!!

349

Ilayarajaaஇசைஞானி இளையராஜா வருகிற 28ம் திகதி மலேசியாவில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்கான ஒத்திகை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த ஒத்திகையில் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் லேசான அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வைத்தியர்கள் அகற்றினர்.

இதையடுத்து இன்று காலை வரையிலும் அவசர சிகிச்சை பிரிவிலேயே இளையராஜா அனுமதிப்பட்டிருந்தார். பிற்பகலில் அவர் பொது வாட்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை தேறி வருகிறது.

இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பிலேயே இளையராஜா இருப்பார் என்றும், அதன் பிறகே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும் 28ஆம் திகதி மலேசியாவில் தனது இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் என இளையராஜா கூறியுள்ளார்.