வவுனியா அரச கால்நடை வைத்திய நிலையத்திற்கு செல்லப்பிராணிகளை எடுத்துச் சென்றவர்களின் அவலநிலை!!

807

வவுனியா அரச கால்நடை வைத்திய நிலையம்

வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு இன்று சென்ற பலர் அங்கு கால்நடை வைத்தியர் இன்றி தமது செல்லப்பிராணிகளுக்கு கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு இன்று காலை 8மணிக்குச் சென்ற பலர் தங்களிடமுள்ள செல்லப்பிராணிகள், கால் நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வைத்தியர் அங்கு இருக்கவில்லை என்றும் நீண்ட நேரமாக காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் நண்பகல் 12மணியளவில் வீடு சென்றுள்ளதாகவும்,

திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை கால் நடைகள் செல்லப்பிராணிகளைப் பார்வையிடும் நேரம் காலை 8.30மணியிலிருந்து 11.30 மணிவரையும் என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்திலிருந்த ஊழியர் ஒருவர் வைத்தியர் வெளியே சென்றுள்ளார் அலுவலகத்திற்கு வருவதற்கு காலதாமதமாகும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அரச சேவையிலுள்ள பலர் விடுமுறை என்பதால் தமது செல்லப்பிராணிகளை மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு எடுத்துச் சென்றபோது அங்கு வைத்தியர் இன்றி ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாகவும் இவ்வாறு அரச அதிகாரத்திலுள்ளவர்கள் மக்களை ஏமாற்றிவருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் தொடர்புபட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் மேலும் தெரிவிக்கின்றனர்.