வவுனியாவில் இலவச மருத்துவ முகாமும் முதலுதவிப் பெட்டி வழங்கலும்!!

310

வவுனியா மகாகச்சக்கொடிய ஆரம்பப் பாடசாலையில் ஒரு நாள் இலவச மருத்துவ முகாமும் மாமடுவ பொலிஸ் நிலையப்பிரிவிலுள்ள ஐந்து பாடசாலைகளுக்கு முதலுதவிப் பெட்டி வழங்கல் நிகழ்வும் மாமடுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜ.பி செனரத் தலைமையில் இன்று (29.06) காலை இடம்பெற்றது.

வன்னிப்பிராந்திய சமுதாயப் பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் ஈஷி மிஷன் சபையின் அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வில் ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய ஒரு நாள் இலவச மருத்துவ முகாமில் இரத்தப்பரிசோதனை, வாசிப்புக் கண்ணாடி வழங்கல், உயர் குருதி அழுத்தம், பல் மருத்துவம், கால் நடை மருத்துவம் போன்ற பலவிதமான நோய்களுக்குமான மருத்துவப் பரிசோதனைகளும், இடம்பெற்றிருந்ததுடன் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் நன்மையடைந்துள்ளனர்.

மாமடுவ பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள ஐந்து பாடசாலைகளுக்கும் முதலுதவிப் பெட்டிகள் பாடசாலை அதிபர்களிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்புப் படையினர் இரத்ததான நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வில் ஈஷி மிஷன் சபையின் பிரதான பிஷப் பி.எம்.இராஜசிங்கம், வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள், இரத்த வங்கி வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மாமடுவ பொலிசார், சிவில் சமூக அமைப்புக்கள் வன்னிப்பிராந்திய சமுதாய பொலிஸ் பிரிவினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.