வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வு!!

189

சித்திரை முழுநிலா தினமான இன்று வவுனியா கோவில்குளம், சிவன்கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளாரின் சிலையடியில் அவரது நினைவுதினம் அனுஸ்டிக்கபட்டது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன், அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அடிகளார் தொடர்பான சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் உபநகரபிதா சு.குமாரசாமி,நகரசபை உறுப்பினர்களான, க.சந்திரகுலசிங்கம், நா.சேனாதிராஜா, தமிழருவி த. சிவகுமாரன், சிவன் கோவில் நிர்வாகத்தினர், இந்துஅன்பக சிறுவர்கள் எனப் பலர் கலந்தகொண்டனர்.