வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு!!

130

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று இடம்பெறற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.கே.உபைத் அவர்களின் தலைமையில் பாடசாலை பிரதான ஒன்றுகூடல் மைதானத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியாஇ சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட 27 உயர்தர மாணவஇ மாணவிகளுக்கே இச் சின்னம் சூட்டப்பட்டதுடன்இ அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த மாணவர்களுக்கான சின்னங்களை அதிபர் ஏ.கே.உபைத் மற்றும் சிரேஸ்ட ஆசிரியை திருமதி கமலதாசன் ஆகியோரால் அணிவிக்கப்பட்டதுடன்,

அதிபரினால் மாணவ தலைவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 27 மரக்கன்றுகளும் பாடசாலைn வளாகத்தில் மாணவத்தலைவர்களாலும்இ அவர்களது பெற்றோர்களாலும் இணைந்து நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில்இ பிரதி அதிபர் றாசிக்இ ஆசிரியர்கள்இ பெற்றோர்கள்இ மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.