வவுனியாவை போதையற்ற தேசமாக மாற்றுவோம் : தெற்கு வலயத்தில் பறந்த பலூன்கள்!!

760

போதையற்ற தேசமாக நாட்டினை மாற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தூரநோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு போதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்கள் பறக்கவிடும் நிகழ்வு வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து ராதாகிருஷ்ணன் இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைய வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இப் போதைப்பொருள் ஒழிப்பிற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பலூன்கள் பறக்க விடப்பட்டதுடன் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்துரைகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய பிரதி கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.