வவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு பெண்ணொருவர் பலி!!

605

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரத்தில் மோதுண்டே பெண் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு (30.06.2019) 11.30 மணியளவில் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ் விபத்தில் பலியாகியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.