வவுனியாவில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ளத் தடை!!

1041

வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் இன்று (01.07.2019) காலை நகரில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்ததும் நடைபாதை வியாபாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் நடைபாதை வியாபாரிகளுக்கு இறுதி எச்சரிக்கை வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த மரக்கறிகளை அகற்றியுள்ளதுடன் இனிவரும் காலங்களில் நடைபாதையில் வியாபார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9.30 மணியளவில் ஹொறவப்பொத்தான வீதி, இலுப்பையடி, சந்தைசுற்றுவட்ட வீதியில் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுத்தி நடைபாதையில் சுகாதாரத்திற்கு தீங்கான முறையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளப்படும் போது பொதுமக்கள் பெரிதும் அசௌகரிங்களுக்குள்ளாகி வருகின்றமை தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்தே இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக இந் நடவடிக்கையினை மேற்கொண்ட நகரசபை ஊழியர் தெரிவித்தார்.