வவுனியா சிதம்பரபுரம் நாகராஜா வித்தியாலயத்தின் மாணவர்கள் மீது குழவி கொட்டியதில் பாதிப்படைந்த 10 மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (02.07) மதியம் பாடசாலை நிறைவடைந்த பின் மாணவர்கள் பாடசாலையின் பிரதான வாயில்ஊடாக வீடு சென்ற போதே இவ் அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
காற்று காரணமாக பிரதான வாயில் அருகே பாடசாலைக்கு வெளியே நின்ற மரம் ஒன்றில் இருந்த குழவிகள் கலைந்து மாணவர்கள் மீது கொட்டியுள்ளது. இதனால் 10 மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இது தொடர்பில் அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த 10 மாணவர்களும் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலை விடுதிகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.





