மன்னார் – தலைமன்னார், பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று மதியம் அரச பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது படுகாயமடைந்த இரு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கா.கார்லின் ஜேம்ஸ் டயஸ் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மற்றைய இளைஞன் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.