வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்!!

681

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி நாளை முதல் பேலியகொட பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு வருடங்களாக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மஹிந்த வில்லுவராச்சி நாளை (03.07.2019) முதல் பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரினால் இவ்விடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியாவிற்கான புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நியமிக்கப்படும் வரையில் வவுனியா பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைகளை மேற்கொள்வார் என்று மேலும் தெரியவருகின்றது.