டூப் நடிகை சர்ச்சையால் இயக்குனர்கள் என்னை புறக்கணிக்கவில்லை : நஸ்ரியா!!

474

Nasriyaநய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சிகளை படமாக்கி விட்டதாக எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பாக பேசப்பட்டவர் நஸ்ரியா. போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் சென்று இயக்குனர் மீது புகார் அளித்தார். பின்னர் அக்காட்சி நீக்கப்பட்டதால் சமரசமானார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு நஸ்ரியாவை படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்குவதாக செய்திகள் வெளியானது. இதனால் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும் கூறப்பட்டது. அத்துடன் புதுப்படங்களில் நடிக்க நஸ்ரியா நிறைய நிபந்தனைகள் விதிப்பதாகவும் சொல்கின்றனர்.இதற்கு நஸ்ரியா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது..

நான் எந்த படத்தில் இருந்தும் நீக்கப்படவில்லை. ஒப்பந்தமான படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சர்ச்சை காரணமாக நல்ல பட வாய்ப்புகளை இழந்து விட்டதாகவோ என்னை புறக்கணிப்பதாகவோ கருதவில்லை.

நய்யாண்டி படத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் எனக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. என் குணம் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. நான் எந்த மாதிரி கரக்டரில் நடிப்பேன் எதில் நடிக்க மாட்டேன் என நய்யாண்டி படசர்ச்சை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

இயக்குனர்கள் என்னை புதுப்படங்களில் நடிக்க அணுகும்போது என் கரக்டர் மற்றும் காட்சி விவரங்களை விளக்கமாக கூறிவிடுகின்றனர். படப்பிடிப்பு துவங்கிய பிறகு எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

நான் நடித்த திருமணம் எனும் நிக்கா படம் அடுத்து ரிலீசாக உள்ளது. இது எனக்கு ஸ்பெஷலான படமாகும். இந்த படத்தின் ரிலீசை ஆவலாக எதிர்பார்க்கிறேன். இவ்வாறு நஸ்ரியா கூறினார்.