வவுனியாவில் பெண்களின் தங்குமிடத்திற்கு தொல்லை கொடுத்தவர் கைது!!

264

தொல்லை கொடுத்தவர் கைது

வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களின் தங்ககம் ஓன்றிற்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஓன்றில் நகரில் அரசாங்க வேலை செய்யும் பெண்கள் சிலர் வாடகைக்கு தங்கியுள்ளனர். இதையறிந்த சிலர் குறித்த வீட்டிற்கு இரவு வேளைகளில் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து குறித்த வீட்டு உரிமையாளரான வயது முதிர்ந்த பெண் இதனை அப்பகுதி இளைஞர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இளைஞர்கள் குறித்த நபர்களை மடக்கி பிடிக்க திட்டமிட்டு இருந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் நபர் ஓருவர் குறித்த வீட்டிற்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து குறித்த நபர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து குறித்த நபரை ஓப்படைத்துள்ளனர். இதன்பின் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிசார் குறித்த நபரை எச்சரித்து நேற்று (02.07) பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.