வவுனியாவில் தேசிய மொழிகள் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு செயலமர்வு!!

323

அரசகரும மொழி கொள்கையை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் ஜூலை 1 முதல் ஜூலை 05ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கமலதாஸ் அவர்களின் நெறியாள்கையின் கீழ் வவுனியா சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள பலநோக்கு பயிற்சி நிலையத்தில் தேசிய மொழிகள் தின விழிப்புணர்வு செயலமர்வு இன்று (03.07.2019) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

செயலமர்வில் மொழி உரிமை மீறல், மொழியின் தேவை, மொழி ஏன் அவசியம் மொழி சம்பந்தமான விளக்கங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இவ் விழிப்புணர்வு செயலமர்வில் சகவாழ்வு சங்க உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.