திரையுலகினர், ரசிகர்கள் சுருதிஹாசனுடன் போனில் பேச தடை!!

305

Shruti-Hasan

தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து திரையுலகினரும், ரசிகர்களும் சுருதிஹாசனுடன் போனில், நேரில் பேச தாய் சரிகா தடை விதித்துள்ளார். முகாமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தன் மூலம்தான் சுருதியுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

தனது பாதுகாப்பு வளையத்துக்குள் சுருதிஹாசனை கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் சுருதியை திரையுலகினரும் ரசிகர்களும் எளிதில் அணுக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் சுருதிஹாசன் தாக்கப்பட்டார். வீடு புகுந்து மர்ம மனிதன் தாக்கினான். அவனை போலீசார் கைது செய்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் படஉலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலஹாசன் போனில் பேசி நலம் விசாரித்தார். சுருதிஹாசன் அந்த வீட்டில் தனியாக வசித்தார். தற்போது அங்கு பாதுகாப்பு இல்லை என்பதால் வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்கு குடிபோக தயாராகிறார். தாய் சரிகாவும் தற்போது சுருதி பாதுகாப்பில் அக்கறை காட்ட துவங்கியுள்ளார்.