வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த புதுமணத்தம்பதி : நள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

259

புதுமணத்தம்பதி

இந்தியாவில் புதிதாக திருமணமான தம்பதி உட்பட 6 பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அருகில் இருந்த கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சட்டீஸ்வர் மாநிலத்தை சேர்ந்தவர் ராதேலால் ராம்நரேஷ் பட்டேல் (25). இவருக்கும் மமதா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் புதுமணத்தம்பதி தங்களது உறவினர்களுடன் புனே நகருக்கு வந்தனர். ராம்நரேஷ் மற்றும் அவர் குடும்பத்தார் கட்டிட வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் அது தொடர்பாக புனேவுக்கு வந்தனர்.

மேலும் அந்த நகரிலேயே செட்டில் ஆகிவிடலாம் என ராம்நரேஷும் அவர் மனைவி மமதாவும் திட்டம் போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சிறிய வீட்டில் இரவில் தம்பதி தூங்கி கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டில் மமதாவின் பெற்றோர்களான ஜேட்டுலால் (50) மற்றும் பிரதீஷின் (45) மற்றும் உறவினர்கள் இருவர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது.

இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் அருகில் உள்ள ஒரு கல்லூரி கட்டிடத்தின் பெரிய சுவர் அப்படியே இடிந்து அவர்கள் வீட்டின் மீது விழுந்தது. இதில் புதுமணத்தம்பதி உள்ளிட்ட 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து சத்தம் கேட்டு அங்கு சென்ற உறவினர்கள் 6 பேரும் சடலங்களாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுதார்கள். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலங்களை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.