வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலய மாணவன் சஞ்சீவன் தங்கப்பதக்கம் பெற்று சாதனை!!

1553

மாணவன் சஞ்சீவன்

2019ம் ஆண்டிற்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டியில் 2ம் நாளாகிய நேற்றைய தினம் இடம்பெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் வவுனியாவின் கிராம்புர பாடசாலையான வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலய மாணவன் செல்வன் எஸ்.சஞ்சீவன் முதலாம் இடத்தைபெற்று தங்கப்பதக்கத்தை சுவிகரித்துக்கொண்டுள்ளார்.

இவர் இத்தூரத்தினை 17நிமிடம் 7 செக்கன்களில் ஓடிமுடித்து இந்த வெற்றியை பெற்றுள்ளார். பின்தங்கிய பாடசாலையில் வறிய குடும்பத்தில் பிறந்த இந்த மாணவன், தொடர் பயிற்சியினாலும் உடற்கல்வி ஆசிரியரினால் வழங்கப்பட்ட பயிற்சியனாலும் அதிபர் ஆசிரியரகளின் ஒத்துழைப்புடனும் தான் இந்த வெற்றியை பெற்றதாக தெரிவித்தார்.

இவ் வெற்றியானது பாடசாலைக்கு பல வருடங்களுக்கு பின் கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.