வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள்!!

850

விபத்து

வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குணாமடுப்பகுதியில் இன்று(08.07) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்ற சொகுசு பேருந்து கண்டி வீதி கல்குனாமடு பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் வீதியைவிட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இதன்போது சொகுசு பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்றும் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்துப் பொலிசார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.