வவுனியாவில் பாடசாலை மாணவர்களை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில்!!

441

விபத்து

வவுனியா புகையிரத நிலைய வீதியில் பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கில் மோதி தள்ளியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (12.07.2019) மாலை இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

புகையிரத நிலைய வீதியூடாக துவிச்சக்கரண்டியில் பயணித்த மாணவர்கள் பண்டாரிக்குளம் நோக்கி பாதையின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் புகையிரநிலைய வீதியூடாக குருமன்காடு நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கில் வீதியினை கடக்க முயன்ற துவிச்சக்கரவண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸ் காவலரணில் காவலில் நின்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.