கழுத்தை தாக்கிய பந்து : சுருண்டு விழுந்த உயிரிழந்த இளம் வீரர்!!

407


கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது பந்து கழுத்தை தாக்கியதில் இளம் வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கிர் அகமது வார் (18). இவர், அரசு சார்பில் அங்கு நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று பங்கேற்றார்.

அப்போது அகமது பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வேகமாக வந்த பந்து அவர் கழுத்தில் தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார்.



உடனடியாக, அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.



இது குறித்து மருத்துவர் ரஹ்மான் கூறுகையில், ஷார்ட் பிட்ச் பந்தை அகமது அடிக்க முயன்ற போது அது அவர் கழுத்தைத் தாக்கியது.


இதையடுத்து அவர் சுயநினைவின்றி மயங்கி விழுந்துவிட்டார், ஹெல்மெட் அணிந்திருந்தும் பந்து அவரை தாக்கியது தான் சோகம் என கூறியுள்ளார்.