சிங்கப்பூர், மலேசியா முழுவதும் திடீர் புகை மண்டலம்..

1015

malaysia

கடந்த சில நாட்களுக்கு முன் சுமத்ரா காடுகளில் ஏற்பட்ட பயங்கர காடுத்தீயினால் சிங்கப்பூர் மற்றும் மலேசியா முழுவதும் புகை சூழ்ந்துள்ளது.

எனவே அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கட்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

கண் எரிச்சல், மற்றும் மூச்சுவிட திணறி வரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். எனவே சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் வரவும் பெருமளவு குறைந்துவிட்டது.

சுமத்ரா தீவின் காட்டுத்தீயை அணைக்க பெருமுயற்சி செய்தும் கடந்த பத்து நாட்களாக கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.