வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் விழா!!

1915

ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன்

ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் விழா கடந்த 08.07.2019 அன்று ஆரம்பமாகி ஆலயத்தின் வழிபாடுகள் இடம்பெற்று இன்று (15.07) பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இன்று மாலை விஷேட பூஜை வழிபாட்டுடன் கூடிய பொங்கல் நிகழ்வும் சுவாமி உள்வீதி, வெளிவீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கின்றார்.

பெருமளவு பக்த அடியார்கள் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அம்பாளின் அருளினைப் பெற்றுய்யுமாறும் நாளைய தினம் வைரவசாந்தி இடம்பெற்று பூஜைகளுடன் நிறைவுறவுள்ளதாக ஆலய நிர்வாகசபையினர் தெரிவித்துள்ளனர்.