ரெஸ்டாரண்ட் நடத்தி பிழைப்பேன் : ஜீவா!!

347

jeevaபடங்கள் ஓடவில்லையென்றால் ரெஸ்டாரண்ட் வைத்து பிழைப்பேன் என்று கூறியுள்ளார் ஜீவா. முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார் ஜீவா.

ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக இரண்டும் படங்கள் பெயர் எடுத்துக்கொடுக்கவில்லை. அதன்பிறகு என்றென்றும் புன்னகை, யான் என்ற இரணடு படங்களில் நடித்து வந்தார். அதில் என்றென்றும் புன்னகை ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் நடித்தது பற்றி அவர் கூறுகையில், என்றென்றும் புன்னகைன்னு டைட்டீல் வச்சிட்டு, படம் முழுக்க என்னை சிடுமூஞ்சியாவே காட்டியிருக்கிறார் இயக்குனர்.

இந்த படத்தில் நடித்தபோது இயக்குனரிடம் இதுபற்றி அடிக்கடி சொன்னேன். ஆனால் படம் ரிலீசாகும்போது இதோட ரிசல்ட் தெரியுமுன்னாரு. அதே மாதிரி படமும் இப்ப வெற்றி பெற்றிருக்கு.

மேலும், ஒருவேளை இந்த படமும் ஓடலேன்னா ஏதாச்சும் ரெஸ்டாரென்ட் நடத்தி பொழைச்சிக்கலாம்னு நெனச்சிருந்தேன். நல்லவேளையா படம் ஓடி, என்னை சினிமாவுல தொடர்ந்து நடிக்கிறதுக்கு ஒரு வழி காமிச்சிருக்கிறார் என்றும் இனிமே இந்தவெற்றியை தக்க வைச்சிக்கிற மாதிரியான கதைகளா தெரிவு செய்து நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.