கிளிநொச்சியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

709

இரு இளைஞர்கள் பலி

கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் கிளிநொச்சி – அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர்கள் தமது வீட்டுக்கு அருகில் புகையிரத கடவையில் அமர்ந்திருந்து பேசித்துக்கொண்டிருந்ததாகவும், புகையிரதம் வருவதினை அவதானிக்காமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் இவ்விபத்து தொடர்பில் இதுவரை பொலிஸார் எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களையும் வழங்கவில்லையென அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் சடலங்கள் புகையிரத அதிகாரிகளினால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.