ஆற்று நீரில் பலியான இரு சகோதரிகளின் இறுதிச் சடங்கு : பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்!!

1262

இறுதிச் சடங்கு

அக்கரப்பத்தனை – டொரிங்டன், அலுப்புவத்தை தோட்டத்தில் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயி ரிழந்த இரு சகோதரிகளினதும் இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளன. 12 வயதுடைய குறித்த இரு சகோதரிகளினதும் இறுதிச் சடங்குகள் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் அலுப்புவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன.

பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இந்த இறுதிச் சடங்குகள் இடம்பெற்றதுடன், இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மதியழகன் லக்ஷ்மி, மதியழகன் சங்கிதா ஆகிய இரு இரட்டை சகோரிகளும் டொரிங்டன் பாடசாலையில் தரம் 07இல் கல்வி கற்று வந்திருந்தனர்.

இவர்கள் கடந்த 18ஆம் திகதி பிற்பகல் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது பாதுகாப்பற்ற பாலத்தினை கடந்து செல்ல முற்பட்ட போது ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சட லமாக மீட்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.